Saturday 26 November 2011

பொம்பள புள்ள...!


ஒரு தாய்-
நம்மை பெத்தாள்-
குழந்தையாய்!

நமக்கு பிறக்கிறது-
குழந்தை -ஒன்னு
தாயாக!

நீந்த சொல்லி கொடுக்க
தேவை இல்ல -மீன் குஞ்சுக்கு !

பாசத்தை பரி சோதிக்க -
தேவை இல்ல -பொம்பள
புள்ள -பெத்தவனுக்கு!

கிணத்துல தண்ணி-
இருந்தால்தான்-வரும்
வாளியில !

நெஞ்சில இரக்கம்-
கொஞ்சம் கூட -
உள்ளவனுக்கு தான்-பொறக்கும்
பொம்பள புள்ள!

அன்று-
பெண்குழந்தையை -
உயிரோட புதைத்ததை-
காட்டு மிராண்டி தனம்-
என்கிறது -இன்றைய
வரலாறு!

இன்று-
கருவை பரிசோதித்து -
விட்டு ''கலைப்பதை'-
''காவாலி ''தனம் -என
சொல்லும் -நாளைய
வரலாறு!

பெத்தவங்களுக்கு-
உதவுற ஆம்பள புள்ளையையும்-
உதவாதபெண் குழந்தையையும் -
விரல் விட்டு-எண்ணி விடலாம்!

அவ்வளவு குறைவுதான்!


திருந்தாதவனும் -
திருந்துவான்-
பெண்பிள்ளை -பிறந்த பின்!

திருந்தாதவனோ-
இருக்கிறான்-மனிதன்
என்ற வேடத்திற்குள்!





2 comments: