Saturday 19 November 2011

ஆம்பள புள்ள..



அடக்கி ,ஒடுக்கி -
வளர்க்கல!

அசிங்க பேச்சை -
தடுக்கல!

எதுக்கெடுத்தாலும் -கோபம்
கண்டுக்கல!

ஊர் வம்பை -தன்
வீட்டுக்கு கொண்டு வருவான்-
ஒரு ''வார்த்தை''கூட -
சொல்லல!

பொம்பள பின்னால -
சுத்துனா-''பொறுப்பா'
எதுவும் சொல்லல!

''கூடா' நட்பை கூட -
''கூடாது''-என்று கூட கூறல!

''மப்பு'வாசம்-
''கப்பு'' அடிக்கும் -அது
''தப்பு''-என கூட சொல்லல!

கையில இருந்த -
ரத்த கரையையும் -கண்டுக்கல!

ஏன்னா?-
அவனுக்கென்ன -
''ஆம்பள புள்ள''-என
பீத்துனவளே!

இப்ப -
கண்ணீரில் -நனைவதில்
பிரயோஜனம் -இல்ல !

தீர்ப்பு வந்திடும் -
நாளை -காலையில!

''ஆம்பள புள்ள ''க்கு எதிரான -
கொலை வழக்குல!

No comments:

Post a Comment