Saturday 26 November 2011

முன்னோர் சொல்!



பணம் என்றால்-
பிணம் கூட -
வாய பிளக்கும் -
என்றார்கள்!

உணர்வற்ற பிணம்-
பிளக்கலாம் -
தன் மானம் உள்ள -
மனிதன் -பிளப்பானா?
என்பதுதான் -
கேள்விகள்!

பணம் ''பத்தும்'-
செய்யும் -என்று
எழுதினார்கள்!

அடுத்ததாக -
பதினொன்றை
எண்ணவில்லை-
எண்ணி இருந்தால்-
லட்சங்கள் -
லட்சியவாதியிடம்-
தோற்றிருக்கும் -என்பதை
எழுதி இருப்பார்கள்!

பணம் பாதாளம் -
வரை பாயும்-
என்றார்கள்!

''பாயும்'என்றவர்கள் -
பாதாளத்தை விட்டு-
பாதுகாக்குமா!-
பாதியிலேயே-
விட்டுடுமா-
என்பதை சொல்லவில்லை!

''மாலை''என்ற -
வார்த்தை ஒன்று!

அர்த்தங்கள் -
இருக்கிறது
இரண்டு!

மாலை நேரத்தையும்-
பூ ''மாலை'யையும் -
குறிக்கும்!

முன்னோர்கள் -
சொல்லியதெல்லாம் -
நல்லதுக்கு!

இப்ப உள்ளவங்க -
மாத்திகிறாங்க -
''தேவைக்கு!'''

No comments:

Post a Comment