Saturday 19 November 2011

அவள்!


அவள் வந்த -
பின்னால்!

என் வாழ்வு -
வண்ண மயமானது -
அந்த பெண்ணால்!

எழுந்திட -
ஆரம்பித்தேன் -
சூரியனுக்கு -
முன்னால்!

சேவ கூட-
 கூவ செய்யும் -
எனக்கு பின்னால்!

சிலருக்கு-
 தயக்கம் வரும் -
பூனை குறுக்கே -
போனால்!

பூனைக்கே-
 தயக்கம் வரும் -
அது குறுக்கே-
நான் போனால்!

வெப்ப மயமாவதால்!-
ஆபத்தாம் உலகுக்கு!

வெள்ளி நிலவே -
உன்-
குறுக்கீடால் -
என்ன ஆகுமோ-
எனக்கு!?

பனி காலத்திலும் -
பணியாதவன் -
நான்!

புல்லின் நுனி அளவு-௦
புன்னகையில் -
பதறிபோனேன்!

யானை பிடிக்க -
ஒரு குழி -
போதுமானது!

ஏழை என்னை பிடிக்க -
உன் கன்ன குழியே-
போதுமானது!

கவலையெல்லாம் -
காணாமல் போனதே!

கன்னி உன்-
கண்ணசைவாலே!

சரளை கற்கள் போல-
சிதற செய்தாயே-
கருங்கல்-
என்னை!

என்னை நீ-
வெறுத்தாலும் -
உன்னையே-
சுத்தி வருகிறேன்!

மிதித்தாலும்-
சுமக்கும் -
''மிதி வண்டியை ' போல!

6 comments: