Saturday 16 November 2013

விழி எனும் ஆயுதம்...!!

அழகு விழியாளே!

"வேல் விழியாள்"-
"வாள் விழியாள்"-என
கவி எழுதியவர்களை-
நீ!
தாக்கினால்-
அது நியாயம்!

ஓரமாக போகும்-
என்னை -
உன் விழியால்-
சிதைக்க முனைவது-
அநியாயம்!

5 comments:

  1. அவளின் விழியை ஆயுதமென நீங்கள்தானே சொன்னீர்கள் சகோ..

    அதன் இயல்பே பதம் பார்ப்பதுதானே.
    ஆளைப் பார்த்து தன் வேலையைச் செய்யாது..:)

    அருமை உங்கள் கற்பனை!
    ரசித்தேன்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. பல நேரங்களில் ஆயுதம் தான்.... :)

    ReplyDelete