Tuesday 15 November 2011

மக்களே.....

என் நாட்டு மக்களே!
பாபரியை -
இடித்தவர்கள்-
எதிர் கட்சி!

வேடிக்கை பார்த்தவர்கள்-
ஆளும் கட்சி!-

நீதி கிடைக்குமா -
நீ யோசி!

பசுமை புரட்சின்னு -
பேரிலே!
படுகொலை செய்கிறார்கள் -
பழங்குடியினரையே!

காந்தி வழி -
அகிம்சை !

சாவர்கர் சொன்னதோ-
நாட்டுக்கே இம்சை!

இருவரின் படம் -
தொங்குவதோ -
நாடாளு மன்றத்திலே!

மத சார்பற்ற நாடுன்னு -
சொல்றான்!

மத வெறிய தூண்டி விட்டு -
ஆட்சியை பிடிக்குறான்!

வீட்டை கெடுப்பது -
பெருச்சாளிகள்!

நாட்டையே கெடுப்பது -
ஊழல் வாதிகள்!

பம்பாய் -
பத்திகிட்டு-
எரிஞ்சது!

ஒரிசா ஒழித்து -
கட்ட பட்டது!

குஜராத் -
கொலை களமானது!

கொடூரங்கள் தடுக்க முடியாத -
கட்சிகள் ஆளும் நாடு இது!

சுதந்திர நாடுங்குறான்!-
சுதந்திர தினம் கொண்டாட -
அனுமதி மறுக்குறான்!

இலவசங்கள் கிடைப்பது உண்டு!-
அது இயங்க மின்சாரம் -
கிடைப்பதில்லை!

மீன் கொடுப்பதை விட -
தூண்டில் கொடுப்பது மேல்!-
என்பது சீன பழ மொழி!

உழைக்க வழியில்லாம !
இலவசம் தருவதில் -
இல்லை -நியாயமே!

சிந்திப்போமாக!
மக்களே!

போராடி பெற்ற -
சுதந்திரம் இது!

சம உரிமை இல்லையினா-
என்ன கொடுமை இது!

பொருளாதார உயர்வுனு-
சொல்லுது -புள்ளி விபரம்!

பெரும்புள்ளி களின் உயர்வுதான் -
தெரியுது-விபரமாக!

பொய் முகத்தை -
தோலுரிக்க !

உண்மையை -
எடுத்துரைக்க !
எல்லா மக்களுக்கும் -
நீதி கிடைக்க !
நெஞ்சை நிமிர்த்தி -
வருகிறார்கள்-
அணிவகுக்க!

பாலில் கலந்த தண்ணிய -
பிரித்து அருந்தும் -
அன்ன பறவை!

அநீதியை விட்டு-
நீதியை நிலை நாட்டும் -
எஸ் .டி.பி.ஐ என்ற -
நியாய வான்களின் பேரவை!

1 comment: